Sunday, July 31, 2011

2

தொலை தூர உறவுக்காரனை உருக்கிய வரிகள் (நினைவுக் கவிதை)

  • Sunday, July 31, 2011
  • குகரூபன்
  • Share
  • கண்டபடி கிறுக்கியிருப்பேன்
    வேறு யாரைப் பற்றி என்றால்
    கலங்கிய படி எழுதுகிறேன்
    உங்கள் பிரிவினை புலம்பாத நெஞ்சங்களிங்கில்லை.

    பழகியவர்கள் பாசம் தான் என்கிறார்கள்
    கூட இருந்தவர்கள் குணம் தான் என்கிறார்கள்
    சொந்தம் எல்லாம் தங்கம் என்கிறார்கள்
    குருக்கள் எல்லோரும் குரு தான் என்கிறார்கள்.
    உத்தியோகத்தோர்கள் உதாரணம் தான் என்கிறார்கள்
    உற்றார்கள் எல்லோரும் உதவி தான் என்கிறார்கள்
    ஊரவர்கள் உயர்ந்தவன் தான் என்கிறார்கள்.
    உடன் பிறந்தோர் உயிர் தான் என்கிறார்கள்.
    பிள்ளைகள் தம்மை கொள்ளை கொண்டவர் என்கிறார்கள்
    மருமக்கள் எல்லோரும் மகிமை தான் என்கிறார்கள்.
    பேரப் பிள்ளைகளோ பெருமை தான் என்கிறார்கள்.

    தள்ளி இருந்ததால் தவித்தபடி வரைகிறேன்……
    உங்கள் காலடி பணிந்திருந்தால் பக்குவப்பட்டிருப்போம்.
    அளவளாவியிருந்தால் ஆசுவாசமாய் வளர்ந்திருப்போம்.
    சண்டை போடும் உறவுகளுக்கிடையில்
    சாந்தமாய் உலாவியிருப்போம்.

    எம் மண்ணின் புகழ் சொல்ல
    மாண்டவரே உங்கள் குணம் ஒன்றே போதும்.
    இந்த நூற்றாண்டில் ஒருவர் நீங்கள் போதும்
    மறுபடியும் வந்து பிறப்பீர் எங்கள் ஊர் உறவாய்.

    2 Responses to “தொலை தூர உறவுக்காரனை உருக்கிய வரிகள் (நினைவுக் கவிதை)”

    ம.தி.சுதா said...
    July 31, 2011 at 4:40 PM

    உணர்வைத் தொட்ட உயிர் வரிகள் வாழ்த்துக்கள் ரூப்...


    அன்பு நண்பன் said...
    August 6, 2011 at 7:25 AM

    அருமை, வாழ்த்துக்கள்


    Post a Comment

    Related Posts Plugin for WordPress, Blogger...

    Subscribe