Thursday, July 14, 2011

0

ஈர விழிகளுடன் ஈராண்டு நினைவஞ்சலி - செல்வரத்தினம் சந்திரராணி

  • Thursday, July 14, 2011
  • சுதா (admin)
  • Share
  • அன்பின் சிகரமான எம் அம்மாவே!!!
    நாலாறு மாதங்கள் ஓடி மறைந்தனவோ
    நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து!!!!
    உங்களை நினைக்கும் போதெல்லாம்
    கண்ணீர் அருவியாய் கொட்டுகின்றதம்மா........

    சுகமும் துக்கமும் கலந்த வாழ்வில்
    சுகத்தை மட்டுமே எமக்களித்து
    துக்கங்களை உங்களுக்குள் புதைத்தீர்களே!!!!
    எம் தேவைகளை நிறைவு செய்ய
    உங்கள் தேவைகளை மறந்தீர்களே!!!

    எங்களுக்குப் பசிக்கும் முன்னே அதை
    நீங்கள் அறிவதால் பசியை நாம் அறிந்ததில்லை..
    அம்மா நீங்கள் இல்லாத எம் வாழ்வு
    காற்றில்லா த் தேசத்தில்
    மூச்சுத் திணறுவதாய் உணர்கின்றோம்!!!!
    இன்று எல்லாம் எமக்கிருந்தும்
    நாம் தாயில்லாத அநாதைகள்!!

    எமது வலிக்கும் சோகத்திற்கும் 
    மருந்தாய் இருந்த நீங்கள் ஏனம்மா
    மருந்தில்லா ஆட்கொல்லி நோயில் வீழ்ந்தீர்கள்?????

    உங்கள் மடிமீது சாய்ந்து 
    கருணையான முகம் பார்த்து 
    எங்கள் தலைகோதும் உங்கள்
    விரல்களைத் தேடி ஏங்குகின்றோம் அம்மா!!

    உங்கள் ஜீவனின் நிழல் என்றென்றும்
    எங்களுக்குள் நிறைந்திருக்கும்
    என்ற நம்பிக்கையில்,
    நீங்கள் காட்டிய பாதையில்
    எம் பயணத்தைதொடர்கின்றோம் .........
    ஓம் சாந்தி சாந்தி சாந்தி!!!!!


    -நிருபன் செல்வரத்தினம்

    0 Responses to “ஈர விழிகளுடன் ஈராண்டு நினைவஞ்சலி - செல்வரத்தினம் சந்திரராணி”

    Post a Comment

    Related Posts Plugin for WordPress, Blogger...

    Subscribe